என்னருமை தலித் சகோதரரே!

ஆய்வுகள் | மற்றவை by அப்துர்ரஹ்மான் மன்பஈ On Nov 23, 2014 Viewers: 1931


என்னருமை தலித் சகோதரரே!

 என்னருமை தலித் சகோதரரே!

மூவாயிரம் வருடங்களுக்கு முன்பு ஆரியர்கள் நமது இந்தியாவின் மீது போர் தொடுத்து ஆதிக்கம் செய்தார்கள். அப்போது அவர்களால் அடிமைகளாக்கப்பட்டவர்கள் தான் தலித்கள். இத்தனை ஆயிரம் ஆண்டுகளான பின்பும் இந்த தலித்களுக்கு ஏற்பட்ட இழிவுகளும் இன்னல்களும் நீங்கவில்லை.

இந்த நாகரீக யுகத்திலும் அவர்கள் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்படுவதும் மட்டம் தட்டப்படுவதும் பிற ஜாதியினரால் தாக்கி துன்புறுத்தப்படுவதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

சில மாதங்களுக்கு முன் தருமபுரி மாவட்டத்தில் தலித் இளைஞர் ஒருவர் வன்னிய இளம்பெண் ஒருவரை திருமணம் செய்ததைக் காரணமாக வைத்து தலித்து மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை இதற்க்கு உதாரணமாகச் சொல்லலாம்.

தங்களின் மதம் விதித்துள்ள கட்டுப்பாட்டை மீறியதும் பெற்றோர் சம்மதமில்லாமல் திருமணம் செய்ததும் தவறு என்றாலும் அந்த இளைஞர் சார்ந்துள்ள சமூகத்தின் மீது தாக்குதல் நடத்தியது அட்டூழியமாகும். இந்த அட்டூழியத்தை துணிச்சலாக நடத்துவதற்கான காரணம் ஏற்க்கனவே தலித்கள் பற்றி பிற ஜாதிக்காரர்களிடம் இருக்கக் கூடிய இளக்காரமான பார்வை! இந்தப் பார்வை இருக்கும் வரை வெவ்வேறு காரணங்களை வைத்து இது போன்ற அட்டூழியங்கள் தொடரத்தான் செய்யும்.

இச்சமயத்தில் தலித் சகோதரர்களுக்கு குறிப்பாக தலித்களுக்காக சேவையாற்றுபவர்களுக்கு சில நன்மையான விஷயங்களை முன்வைக்கிறோம். உங்களுக்கு ஆட்சியாளர்களாலும் அரசியல்வாதிகளாலும் அநீதமிழைக்கப்படுகிறது. அரசு அதிகாரிகளால் அநீதமிழைக்கப்படுகிறது பிற ஜாதி மக்களால் அநியாயம் செய்யப்படுகிறது. செய்தி ஊடகங்களால் அநீதமிழைக்கப்படுகிறது.

இவ்வாறு பல தரப்பிலிருந்தும் பலவிதமாக அநீதமிழைக்கப்படும் போது அதைப்பற்றி அப்போது மட்டும் தான் சிந்திக்கிறோம். அதற்கெதிராக மட்டும் போராடுகிறோம். இதனால் ஒரு தரப்பின் அநீதத்துக்கு தீர்வு காணும்போது  அல்லது தீர்வுகாண முயற்சிக்கும் போது இன்னொரு தரப்பிலிருந்து இன்னொரு அநீதம் வருகிறது. இவ்வாறு அநீதங்கள் அணிவகுத்து வருகின்றன.

ஆனால் எல்லாத் தரப்பினரின் எல்லா அநீதங்களிலிருந்தும் விடுபடுவதற்கான அடிப்படையான வழிமுறைகள் பற்றி கவனம் செலுத்துவதில்லை. அத்தகைய அடிப்படைகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

1. பிறப்பின் அடிப்படையில் அனைவரும் சமம்.

பிறப்பின் அடிப்படையில் மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வு உண்டு என்ற மிகத் தவறான நம்பிக்கை இந்துக்களிடம் உள்ளது. அதாவது சூத்திரர்களாகிய நீங்கள் கடவுளின் பாதத்திலிருந்து உருவானவர்கள், ஏனைய பிரிவினர்கள் கடவுளின் மேற்பகுதியிலுள்ள மற்ற உறுப்புகளிலிருந்து உருவானவர்கள் என்ற கற்பனையின் அடிப்படையில் இந்த நம்பிக்கை புகுத்தப்பட்டுள்ளது.

இந்த தவறான நம்பிக்கை உங்களுக்கும் இருந்தால் நீங்கள் உங்களுக்கெதிரான அநீதங்களுக்கு எதிராக போராடுவதற்கு அர்த்தமில்லை. ஏனென்றால் உங்களுக்கு எதிராக மற்ற ஜாதியினர் நடத்தும் அநீதமெல்லாம் நீங்கள் மட்டமானவர்கள் என்ற நம்பிக்கையின் விளைவாக நடத்தப்படுவதே. இந்நிலையில் நீங்களும் உங்களைப் பற்றி பிறப்பின் குறைவு கொண்டவர்கள், தாழ்ந்தவர்கள் என்று எண்ணிக் கொண்டிருந்தால் நீங்களும் தவறான பாதையில் உள்ளீர்கள் என்பது தான் பொருள்.

சரியான நம்பிக்கை என்னவெனில் எல்லாம் வல்ல இறைவன் துவக்கமாக ஓர் ஆண் ஒரு பெண் வழியாகவே மனித இனத்தைப் பெருகச் செய்தான். மனிதர்கள் எந்த இனமாக இருந்தாலும் எந்த குலமாக இருந்தாலும் எந்த கோத்திரமாக இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் ஆதி தாய் தகப்பன் அந்த இருவர் தான்.

இப்படித் தான் பழங்கால இறைவேதங்களிலும் இறுதி இறைவேதமான திருக்குர்ஆனிலும் சொல்லப்பட்டுள்ளது. திருக்குர்ஆனில் இறைவன் கூறுகிறான்:

மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடயவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழ்ந்து) தெரிந்தவன். (அல்குர்ஆன் 49:13)

நீங்கள் இந்த உண்மையை நம்பிக்கைக் கொண்டு உங்கள் மக்களிடமும் பிற மக்களிடமும் பிர்ச்சாரமும் செய்ய வேண்டும். இதற்கு மாறாக பழைய தவறான நம்பிக்கையை விட்டுவைப்பீர்கள் என்றால் கடந்த மூவாயிரம் ஆண்டுகளாக இழிவை அனுபவித்துக் கொண்டிருப்பது மட்டுமல்ல இன்னொரு மூவாயிரம் ஆண்டுகளானாலும் இதே இழிவை அனுபவித்துக் கொண்டுதான் இருப்பீர்கள்!

2. நாம் கௌரவமானவர்கள் என்ற உணர்வு வேண்டும்; கௌரவமானவர்களாக இருக்க வேண்டும்.

மற்றவர்களுக்கு நாமும் சமம் என்ற உணர்வுடன் நாம் கௌரவமானவர்கள் என்ற உணர்வு ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும். உண்மையில் கௌரவமானவர்களாக இருக்க வேண்டுமென்றால் கீழ்த்தரமான நடவடிக்கைகளிலிருந்து விலகியிருக்க வேண்டும்.

கீழ்த்தரமான செயல்பாடுகள், கீழ்த்தரமான பேச்சுக்கள், அற்ப காரணங்களுக்காக ரோட்டில் சண்டை போட்டுக் கொண்டிருப்பது, மது குடித்துவிட்டு தெருவில் சச்சரவு செய்துகொள்வது போன்றவை ஒரு கூட்டத்திடம் எந்த அளவிற்கு உள்ளதோ அந்த அளவிற்கு அந்த கூட்டம் கீழ்த்தரமான கூட்டம் தான்.

தமது ஜாதிக்காரர்கள் கூட்டமாக சேர்ந்துவிட்டால் பிற ஜாதிக்காரர்களை வம்புக்கிழுப்பது, தமது ஜாதிக் கட்சியினருடன் சென்று பிற சமூகத்தவர் வியாபார நிறுவனங்களில் அடாவடித்தனம் செய்வது, இவையெல்லாம் அநாகரீகமான செயல். தாழ்த்தப்பட்ட நிலையிலிருந்து உயர்வதை விரும்பக் கூடிய சமூகத்திடம் இந்த அநாகரீகச் செயல்கள் இருக்கக் கூடாது.

ஆனால் இத்தகைய தாழ்த்தும் செயல்பாடுகள் உங்கள் சமூகத்தவரிடம் அதிகம், சொல்லப்போனால் உங்கள் மதத்துக் காரர்கள் உங்களை தீண்டத் தகாதவர்களாக நடத்தும்போது உங்களை மரியாதையுடன் நடத்துபவர்கள் முஸ்லிம்கள். ஆனால் பல ஊர்களில் அந்த முஸ்லிம்களிடமே வீண் வம்பு செய்து கலவரங்களை உண்டுபண்ணியவர் உங்கள் ஜாதியினர்.

கவனத்தில் கொள்ளுங்கள்! இத்தகைய தாழ்ந்த நடவடிக்கைகளை நீங்கள் கைவிடாத வரை தாழ்த்தப்படுவதிளிருந்து உங்களால் விடுபட முடியாது.

3. அடிமைத்தனத்திலிருந்து உண்மையாக விடுபட வேண்டும்.

சட்டம், தலித்துகளாகிய உங்களுக்கு சமத்துவத்தை வழங்கியுள்ளது. பழைய அடிமைத்தனத்திலிருந்து விடுதலைப் பெற்றுத் தந்துள்ளது. ஆனால் உங்களின் பிற்போக்குத் தனத்தினால் ஆதிக்க வெறிபிடித்த ஜாதிக்காரர்களுக்கு  அடிமைகளாகவே இருந்து கொண்டிருக்கிரீர்கள்.

அவர்கள் ஆட்டுவிக்கிறபடி ஆடுபவர்களாக இருக்கிறீர்கள். ஆரியர் உள்ளிட்ட ஆதிக்க வெறி ஜாதியினர் சிறுபான்மை மக்களுக்கு எதிராக உங்களைத் தூண்டிவிட்டால் சிந்திக்காமல் சிறுபான்மை மக்களுக்கு எதிராகச் செயல்படுகிறீர்கள். உதாரணமாகச் சொல்வதென்றால் கோயம்புத்தூரில் 1997ம் வருடம் நவம்பர் மாதத்தில் முஸ்லிம்கள் மீது கொடுமையான தாக்குதலையும், சூறையாடலையும் உங்களை வைத்துத் தான் நடத்தியிருக்கிறார்கள் ஆதிக்க வெறியர்கள்.

உண்மையில் அதுபோன்ற சந்தர்பத்தில் நீங்கள் முஸ்லிம்களுக்குத் துணையாகத்தான் நின்றிருக்க வேண்டும். ஏனென்றால், ஆதிக்க வெறி ஜாதியினர் உங்கள் மீது செய்துகொண்டிருந்த அட்டூழியங்களைக் குறைத்திருப்பதற்குக் காரணம் நீங்களும் முஸ்லிம்களாக ஆகிவிடுவீர்களோ என்ற பயத்தினால் தான்.

சற்று யோசித்துப் பாருங்கள், எந்த ஆதிக்க வெறி ஜாதியினரின் தூண்டுதலால் முஸ்லிம்கள் மீது தாக்குதலையும், சூறையாடலையும் நடத்திநீர்களோ அதே ஜாதியினரோடு ஒரு கட்டத்தில் நீங்கள் மோதிக் கொண்டு தாக்குதலும், சூறையாடலும் நடத்தும்போது, ‘இந்த பறப்பயலுகளே இப்படித்தான்என்று அந்த ஜாதிக்காரர்கள் பேசுவார்கள்.

ஆதிக்க வெறியர்கள் தூண்டிவிட்டால் பலவீனப் பட்ட மக்கள் மீது தாக்குதலும், சூறையாடலும் நடத்தும் கூட்டம் தாழ்ந்த அடிமைக் கூட்டம் தான். இந்நிலையை மாற்றிக் கொள்ளாவிட்டால் கடந்த மூவாயிரம் ஆண்டுகளாக அனுபவித்த இழிவு இன்னொரு முப்பதாயிரம் ஆண்டுகளானாலும் மாறப் போவதில்லை!

4. “நான் தலித்என்ற ஆயுதத்தை கீழே போட வேண்டும்.

தலித் மக்களை வழிநடத்தக் கூடியவர்கள் எதற்க்கெடுத்தாலும் நாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள், தலித்துகள் என்று புலம்புவதைக் கைவிட வேண்டும். மற்றவர்களுக்குச் சமமாக வாழ்வதற்கும், முன்னேறுவதற்கும் நல்லெண்ணம் கொண்டவர்களால் வழி ஏற்ப்படுத்தித் தரப்பட்டுவிட்டது. அதை முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஒரு காலகட்டத்தில் இட ஒதுக்கீடு போன்ற வாய்ப்பு பறிக்கப் படலாம், அப்போது மற்றவர்களுடன் போட்டி போட்டு திறமையுடன் முன்னேறும் தகுதி கொண்டவர்களாக இருக்க வேண்டும். அதனால் தாழ்வைக் குறிக்கும் பெயர்களை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்.

5. எல்லாம் வல்ல இறைவன் ஒருவனுக்கு மட்டுமே அடிமைப்படுதல் வேண்டும்.

நான் எல்லாம் வல்ல இறைவனுக்கு மட்டுமே அடிமை. அவனை மட்டுமே வணங்கி வழிபடுவேன். என்ற சரியான நிலைபாட்டை எடுக்கும் மனிதன் சுயமரியாதை உடையவனாக இருப்பான். மற்றவர்களும் என்னைப்போல் இறைவனின் அடிமைகளே என்ற உணர்வுள்ளவன் தாழ்ந்து போகமாட்டான்.

இறைவன் மட்டுமே வணக்கத்திற்குரியவன் என்பதை ஏற்று அதன்படிச் செயல்படுவதே மனிதனின் முதன்மையான கடமை. இதனையே வேதங்களெல்லாம் வலியுறுத்தியுள்ளன. இதனையே இறைவன் தனது இறுதி வேதமாகிய குர்ஆனிலும் கூறுகிறான்.

நிச்சயமாக உங்கள் சமுதாயம் (வேற்றுமை ஏதுமில்லா) ஒரே சமுதாயம் தான். மேலும், நானே உங்கள் இறைவன்; ஆகவே என்னையே நீங்கள் வணங்குங்கள்.” - திருக்குர்ஆன் 21:92

இந்த அம்சத்தை நாம் இறுதியாகச் சொல்லியிருந்தாலும் இதுவே முதன்மையானது. இங்கு நாம் எழுதியிருப்பதெல்லாம் தாழ்த்தப்பட்ட மக்கள் உண்மையிலேயே உயர்வடைய வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தான். ஏற்பீர்களா? என்னருமை தலித் சகோதரர்களே!

  -M. அப்துர்ரஹ்மான் மன்பஈ, MA. ,M.phil

 

தேடல்
தொடர்புடைய பதிவுகள்
001 AlFathiha அத்தஹியாத் இருப்பில் விரலசைத்தல்! அன்பளிப்பு - உள்ளங்களை வெல்வோம்! – தொடர் 2 அரஃபா நோன்பு எந்த நாளில் பிடிக்க வேண்டும்? அரஃபா பேருரை! அரபியில்தான் குத்பாவா? அலைபேசி ஒழுக்கங்கள் அழிக்கப்பட்ட யானைப்படை!.. [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-2] அழைப்பு கடிதம் (இந்துவுக்கு) அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத் வழிமுறையை பின்பற்றுவோம் ஆட்சி மாற்றம்! அஞ்சத் தேவையில்லை! ஆண் குழந்தைகளுக்கு தங்கம் அணிவித்தல் ஆபாசத்தை தவிர்ந்து கொள்வது எப்படி...? இந்துக்களின் தாய்மதம் இப்ராஹீம் நபியும் காளைக் கன்றும்... இப்ராஹீம் நபியும் உயிர்த்தெழுதந்த பறவைகளும்... இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்) இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) மகத்தான வழிகாட்டிகள் - 5 இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) - 2 மகத்தான வழிகாட்டிகள் - 6 இமாம் மாலிக்(ரஹ்)_மகத்தான வழிகாட்டிகள்-2 இமாம் ஷாபிஈ (ரஹ்) இறுதி வரை ஏகத்துவம் இஸ்ரவேலரும் காளை மாடும்... இஸ்லாம் அழைக்கிறது! இறைவன் இருக்கிறானா ?அவன் ஒருவனா? பலரா? உணர்வுக்கு செவி கொடுங்கள் – உள்ளங்களை வெல்வோம்! – தொடர் 3 உள்ளங்களை வெல்வோம் – 5 உள்ளங்களை வெல்வோம்! – தொடர் 1 உஸைர் நபியும் உயிர் பெற்ற‌ கழுதையும்... உஸ்மான் (ரழி) கொலையும், கொள்கைக் குழப்பவாதிகளின் நிலையும்! என்னருமை தலித் சகோதரரே! எல்லை மீறுபவர்கள் அழிக்கப்படுவர்... ஒரு நடிகையின் வாக்குமூலம்! கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-1 கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-2 கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-3 கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-4 கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-5 கருப்பு பணத்தை ஒழிக்க ஒரே வழி! கரை ஒதுங்கிய மீன்களும்… குரங்குகளாக மாற்றப்பட்ட மீனவர்களும்… கர்ப்பமுற்றிருக்கும் பெண்ணும், பாலூட்டும் பெண்ணும் ரமலானில் நோன்பு நோற்க முடியாவிட்டால் அவர்கள் என்ன செய்ய வேண்டும்? காதல் - ஓர் இஸ்லாமிய பார்வை part -2 காதல் - ஓர் இஸ்லாமிய பார்வை part-1 காலையா மாலையா? கிறிஸ்துவ சகோதரர்களுக்கு ஒரு கடிதம் கிலாஃபத் - இஸ்லாமிய ஆட்சி குகை தோழர்களின் கதை குணத்தை மாற்ற முடியுமா? குற்றம் செய்வோரை வெறுத்து ஒதுக்குவோம் குற்றவாளிக் கூண்டில் முஸ்லிம்கள் - தொடர்- 1 ! குற்றவாளிக் கூண்டில் முஸ்லிம்கள் – 3 குற்றவாளிக் கூண்டில் முஸ்லிம்கள் – தொடர்- 2 ! கேம் விபரீதங்கள் கேள்வி: அல்குர்ஆனின் 3:26, 27 வசனத்தில், நீர் சொர்க்கத்தில் நுழைவீராக! என்று அவருக்கு கூறப்பட்டது” என்று உள்ளது.? கேள்வி: கிளி உள்ளிட்ட பறவைகளை கூண்டில் அடைத்து வைத்து வளர்ப்பது ஆகுமானதா? அஸாருத்தீன், வில்லிவாக்கம், சென்னை. கேள்வி: நபி(ஸல்) அவர்கள் காலத்தில் கொள்ளை நோய் வந்த போது, இருப்பவர்கள் தங்கள் இடங்களில் இருந்து கொள்ளுங்கள். வெளியே இருப்பவர்கள் நோய் உள்ள இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்றுதான் சொன்னார்கள். ஆனால் அந்த நேரத்தில் தொழுகைகளில் மாற்றம் செய்யவில்லை. தற்போது கொரானா காலத்தில் தொழுகைகளில் முகமூடி அணிந்து, சொல்கின்ற இடைவெளியில் வரிசையில் நின்று தொழுங்கள் என்ற நடைமுறை ஒத்துக்கொள்ளத் தக்கதா? ஷைத்தான் இடைவெளியில் புகுந்துவிடுவானே? விளக்கம் தரவும்! கொடிய மிருகங்களாக மாறிவிட்ட மதவெறியர்கள்! சத்திய சனாதன தர்மத்தை பின்பற்றுவீர்! சலஃப், சலஃபி சரியான புரிதல். தொடர்- 2 சலப், சலபி – சரியான புரிதல்! சுலைமான் நபியும்... ஹுத்ஹுத் பறவையும்... சூனியத்தை விழுங்கிய அதிசயப் பாம்பு! சொர்கத்தில் துணைகள் ஜிஹாத் - ஒரு விளக்கம் ஜிஹாத் - ஒரு விளக்கம் [ பாகம்-2 ] தக்லீதின் எதார்த்தங்கள் தற்கொலை தீர்வாகுமா? தாய் மதம் திரும்பினார் யுவன் ஷங்கர் ராஜா திருக்குர்ஆன் கூறும் (உண்மைக்) கதைகள் - 01 திருநங்கைகளும் சமூகத்தின் கடமைகளும் துல்ஹஜ் மாதம் பிறை 11,12,13. உழ்ஹிய்யா கொடுக்கலாமா? தேவனுக்கு குமாரனா? தொழுகை உடைய "ரூக்ன்" என்று சொல்லப்படும் ஃபர்ள்களிலிருந்து ஏதேனும் ஒன்று விட்டு விட்டால் அதை எவ்வாறு சரி செய்வது? தொழுகை முடித்து திரும்புதல் பற்றிய ஹதீஸ் தோன்றின் எடுப்போடு தோன்றுக! – உள்ளங்களை வெல்வோம்! – தொடர் 4 நபி சுலைமான் தான் ஸ்ரீ ராமர்…?! நபியவர்கள் தங்க மோதிரம் அணிந்ததாக கூறப்படும் ஹதீஸ், ஹதீஸ் எப்படி புரிவது ? -8 நம்மை விட்டு பிரிந்தவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய நல்லறங்கள் நற்குணமும் நபியும் வழிகாட்டும் வாழ்வியல்- தொடர் 03 நல்ல மாற்றத்தில் ஏற்பட்ட தீய மாற்றம் நல்லோரும் செய்யும் தவறுகள் - 1 (வீட்டோடு மாப்பிள்ளை) நல்லோரும் செய்யும் தவறுகள் - 3 (மார்க்கத்தின் பெயரால் சச்சரவு) நல்லோரும் செய்யும் தவறுகள் - 4(பிள்ளைகளுக்கு நேரம் ஒதுக்காத பெற்றோர்) நல்லோரும் செய்யும் தவறுகள் - 6 (மனைவியரிடம் கடுமை காட்டும் கணவர்கள்) நல்லோரும் செய்யும் தவறுகள் - 7 (மனைவியரிடம் கடுமை காட்டும் கணவர்கள் - 2) நல்லோரும் செய்யும் தவறுகள் -2 பெண்களின் ஆடை - கவனம் தேவை நல்லோரும் செய்யும் தவறுகள்-5 ( பெண்ணுக்கு சொத்தில் பங்கில்லையா?) நெருக்கம் இறுதிவரை தொடரட்டும்..... பரக்கத்தை இழந்த ரஹ்மத்...! பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் மீது குற்றம்சாட்டும் தில்லி கலவரம் தொடர்பான புத்தகம் வாபஸ்! பிக்ஹுன் னவாஸில்= பிரச்சினையான சந்தர்ப்பத்தில் மார்க்கச் சட்டம் புரிய சிரமமான வசனங்கள்-1 புரிய சிரமமான வசனங்கள்-2 புரிய சிரமமான வசனங்கள்-3 புறக்கணிக்கப்படும் நபியின் வழிமுறைகள் - தாடியை வளர்ப்பதும் மீசையைக் கத்தரித்தலும்! பேசிய எறும்பு... பொது சிவில் சட்டம் எனும் பூச்சாண்டி! மனிதநேயத்தை வென்ற மிருகநேயம்! மறுமையில் ஓர் உரையாடல்... மஸ்ஜிதின் ஒழுக்கங்கள் மார்க்கப்பணிக்கு ஊதியம் பெறலாமா? மீலாதும் மவ்லிதும் முஸ்லிம் எல்லாரும் ஜிஹாதி தான் முஹம்மதிய சமுதாயத்தின் காரூன்கள் முஹம்மது (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) கட்டிடத்தின் கடைசிக் கல் முஹர்ரம் மாதமும் ஆஷூரா நோன்பும் மூசா நபியும்... அதிசயப் பாம்பும்‌... மூஸா நபியும் ஹிள்ர் நபியும்! யார் இந்த அல்லாமா ஷேய்க் முஹம்மது நாஸிருத்தீன் அல்பானி(ரஹ்) யூனுஸ் நபியை விழுங்கிய பிரம்மாண்ட மீன்... ரமலானும் ஈமானும்! ரமளானின் கடைசி பத்து நாட்கள் ரமளானை பயனுள்ளதாக்குவோம் லவ் ஓம்’ ஐ மறைக்கவே லவ் ஜிஹாத் பூச்சாண்டி! வரலாற்றை திரிக்கும் வகுப்புவாதிகள் வழிகாட்டும் வாழ்வியல் - தொடர் 02 வழிகாட்டும் வாழ்வியல் - தொடர்:01 ஷேய்க்.முஹம்மது இப்னு ஸாலிஹ் அல் உஸைமின்(ரஹ்) வாழ்க்கை வரலாறு ஷைத்தான்கள் பரவுதல் பற்றிய ஹதீஸ், ஹதீஸ் எப்படி புரிவது? - 7 ஸகாத்துல் (ஸதகத்துல்) பித்ர் பற்றி விளக்கம்? ஸாமிரியும்… காளை மாட்டுச் சிலையும்… ஸாலிஹ் நபியும் அதிசய ஒட்டகமும் [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-4] ஹஜ் உம்ரா தொடர்பான சந்தேகங்கள்! ஹதீஸ் எப்படி புரிவது-3 ஹதீஸ் எப்படி புரிவது? ஹதீஸ் - 6 ஹதீஸ் எப்படி புரிவது? ஹதீஸ் - 5 ஹதீஸ் எப்படி புரிவது?ஹதீஸ் - 4( தொழுகையை முறிக்கும் மூன்று) ஹதீஸ்_எப்படி புரிவது-1 ஹதீஸ்_எப்படி புரிவது-2 TEACHERS TRAINING COURSE